திருப்பரங்குன்றம் அருகே ஊருக்குள் புகுந்த குரங்கு.!

திருப்பரங்குன்றம் அருகே ஊருக்குள் புகுந்த குரங்கு.!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே நிலையூர்,  கூத்தியார்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒரு குரங்கு சுற்றித்திரிந்து வருகிறது. பொதுமக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக சென்று வருகிறது. சில நேரங்களில் குழந்தைகள் கைகளில் வைத்திருக்கும் திண்பண்டங்களை பிடுங்கி சாப்பிட முயல்கிறது. அதை தடுக்கும்போது, தாக்க முயற்சிக்கிறது.

இதற்கிடையில் குரங்கை காகங்கள் மற்றும் தெரு நாய்கள் துரத்துவதால் அங்மிங்கும் ஓடுகிறது. எனவே அந்த குரங்கின் நடமாட்டத்தை கண்காணித்து, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் மலை பகுதியில் தான் குரங்குகள் அதிகமாக உள்ளன. மலையில் சுற்றித் திரிந்த குரங்குகள் சுற்றுலா பயணிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணவு பொருட்களை கொடுத்து பழக்கியதால் கிரிவல வீதிகளில் வந்து நிற்கிறது. இதனால் பஸ், லாரி போன்ற ஏதாவது ஒரு வாகனத்தில் ஏறிய குரங்கு ஒன்று வழிதவறி நிலையூர், கூத்தியார்குண்டு பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது.

இந்த குரங்கு பெரும்பாலும் குடியிருப்பு பகுதியில் தான் சுற்றித்திரிகிறது. இன்று காலை முதல் தற்போது வரை கூத்தியார்குண்டு  பகுதியில் வீடு வீடாக சென்று கொண்டிருக்கிறது. அப்போது காகங்கள் மற்றும் நாய்கள் அந்த குரங்கை விடாமல் துரத்தின. இதனால் பயத்தில் அங்மிங்கும் ஓடியது. எனவே ஏதாவது வாகனத்தில் அடிப்பட்டு குரங்கு இறக்கும் முன், வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறிகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!