
திருப்பரங்குன்றம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை விருந்து.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளன இன்று அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வந்தனர்.
அந்த வரிசையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூரில் அமைந்துள்ள ஆதரவற்றோர், மனநலம் பாதிக்க்கப்பட்டோர்கள் மற்றும் முதியோர்களை பாதுகாக்கும் மையமான செஷையர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கி அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மதுரை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் MK.பிரபு தலைமை வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு பிரிவு மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் M.செல்வராஜ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவு ஒன்றிய தலைவர் G. ராம்ராஜ் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தேவர் இன பாதுகாப்பு பேரவை சின்ராஜ், ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். மாயக்கண்ணன், ராதாகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.