மதுரையில் தமிழ்ச் சங்கம் நிறுவிய வள்ளல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவிய வள்ளல் பாண்டித்துரை தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவிய வள்ளல் பாண்டித்துரை தேவர் சிலைக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

====================================

மதுரையில் நான்காம் தமிழ்ச் நான்காம் நிறுவனர் வள்ளல் பாண்டித்துரை தேவர் 158 – வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 21.03.2025 வெள்ளிக் கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்ச் சங்கம் சாலை , மேம்பாலம் அருகில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தோழர் மேரி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தோழர் ஆனந்தன் ( பொருளாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்) பெருந்தமிழர் பாண்டித்துரை தேவருக்கு புகழ் வணக்க முழக்கம் எழுப்பினார்.

மதுரை மாநகராட்சி பெயர்ப் பலகையில் உள்ள “தமிழ்ச்சங்கம் ரோடு” என்பதை “தமிழ்ச்சங்கம் சாலை” என்று மாற்றுமாறும், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் எழுதிடுமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தோழர்கள் கதிர் நிலவன் ( மதுரை மாநகர் செயலாளர், த.தே.பே.), அருணா ( தலைவர், மகளிர் ஆயம்), புருசோத்தமன், விசு கரிகாலன், தியாகலிங்கம், விடியல் சிவா உள்ளிட்ட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பாண்டித்துரை தேவர் சிலையை சுத்தம் செய்து யாரும் மாலை அணிவிக்காத நிலையில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களே சிலையை சுத்தம் செய்து , முதல் மாலை அணிவித்தது குறிப்பிடத்தக்கது.
.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!