
வருகின்ற ஏப்ரல 19 நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட நாம் தமிழர் கட்சி முடிவு செய்திருந்த நிலையில், அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் கர்நாடகாவை சர்ந்த பாரதீய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி டெல்லி உயர்நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
விசாரணையின் போது, நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி. அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு ஒரு சின்னத்தை முழுமையாக ஒதுக்கீடு செய்ய முடியாது என தெரிவித்தது. மேலும் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி பதிவு செய்ததன் அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

புதிய சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம்
இதனையடுத்து புதிய சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி கேட்டிருந்த நிலையில் அந்த கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல சுயேட்சை கட்சிகளுக்கு எந்த எந்த சின்னம் என்ற அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.