திருப்பரங்குன்றம் லெட்சுமி தீர்த்தக்குளம் – அதிநவீன தொழில்நுட்பத்தில் 6.50 கோடி செலவில் சீரமைப்பு பணி…!

அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக போற்றப்பட்டு வரும் முருகன் திருக்கோவிலில் உள்ள லெட்சுமி தீர்த்தகுளம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும்,66 மீட்டர் அகலமும் கொண்ட,லெட்சுமி தீர்த்தகுளம் அமைந்து உள்ளது.

இந்த குளமானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெய்வானை அம்பாளுக்காக உருவாக்கப்பட்டதாக செவிவழி செய்தி கூறுகிறது. ஒரு காலத்தில் இந்த குளமானாது வற்றாத புனித தீர்த்தக் குளமாக இருந்து வந்துள்ளது. தெளிந்த தண்ணீரில் வண்ணமயமான மீன்கள் இருந்து வந்தன. ஆகவே கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வண்ண மீன்களுக்கு பொரி வாங்கிப் போட்டு மகிழ்ந்து வந்தனர்.குறிப்பாக தேமல், பருவு,உள்ளவர்கள் இந்த லெட்சுமி தீர்த்தக்குளத்தில் உப்பு, மிளகு வாங்கிப் போட்டு நோயை குணமாக்கி வந்துள்ளனர்.

ஆகவே நோய் தீர்க்கும் புண்ணிய தீர்த்தகுளமாக போற்றி பாதுகாத்து வந்தனர்.இதேவேளையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் நேரடியாக லெட்சுமி தீர்த்த குளத்திற்கு சென்று கால்களை அழம்பி, குளத்தில் உள்ள தண்ணீரை (தீர்த்தத்தை) கையில் எடுத்து தலையில் தெளித்தும், கண்களில் ஒத்திக்கொண்ட பிறகே சாமி தரிசனம் செய்ய கருவறைக்கு செல்வார்கள், இத்தகைய நடைமுறை பழங்காலம் தொட்டு இருந்து வந்துள்ளது.மீன்களுக்கு பொரிபோடு வதற்கும் தேமல், பருவு உள்ளவர்கள் உப்பு,மிளகு போடுவதற்கும் வசதியாக லெட்சுமி தீர்த்த குளத்தின் வளாகத்தில் உப்பு மிளகு பொரி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதற்காக கோவில் நிர்வாகத்தின் கீழ் ஆண்டுதோறும் விற்பனை உரிம ஏலம் விடப்பட்டது. அதன் மூலம் சில லட்சங்கள் கோவிலுக்கு வருமானம் கிடைத்தது.

பழமை மாறாத சீரமைப்பு: இத்தகைய லெட்சுமி தீர்த்தகுளத்தின் சுற்றுச்சுவர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து 3 முறைக்கு மேல் இடிந்துவிழுந்தது. இதனையொட்டி கோவில் நிர்வாகம் வெட்கமி தீர்த்தகுளத்தை சீரமைப்பது என்று முடிவு செய்தனர். அதன்படியே ரூ.6. கோடியே 50 லட்சத்தில் பழமை மாறாமல் அதிநவீன தொழில் நுட்பத்துடன் குளத்தின். 3 பக்கமும்கற்கள் கொண்டு சுற்றுச்சுவரும், மற்றொருபக்கத்தில் காங்கீரிட்டிலானசுவரும் கட்டப்பட உள்ளது மேலும் கோடைகாலத்திலும் வற்றாத நிலையாகதண்ணீர் தேங்குவதற்கு வசதியாக குளம் அழமாக தூர்வாரப்படுகிறது.

இதற்காக மு தல்கட்டமாக இந்துசமய அறநிலையதுறை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டு பணிக்கான டெண்டர் விடப்பட்டு தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப அனுமதி கமிஷனரிடம் கோரப்பட்டுள்ளது .உரியஅனுமதி கிடைத்தவுடன். ஒரு சில வாரத்தில் லெட்சுமி தீர்த்த குளம் தூர்வாரும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!