மதுரை திருப்பரங்குன்றத்தில், நின்ற வேன் மீது கார் மோதி பெண் உள்பட இரண்டு பேர் பலி

மதுரை திருப்பரங்குன்றத்தில் நின்ற வேன்மீது கார் மோதியதில் பெண் உள்பட இரண்டு பேர் பலியானார்கள். தென்காசியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி ஜெயஸ்ரீ 50. இவரும் இவரது உறவினர்கள் சண்முகராஜா 40, கிருஷ்ணன் 38, வைரமுத்து 29, செந்தில் இசைக்கி 28 ஆகியோர் கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

பின்னர் நள்ளிரவு சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்கள் சென்ற வேன் திருப்பரங்குன்றம் அருகே திருநகர் மொட்டமலை பாரதி நகர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த மற்றொரு வேன்மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்தானது. சம்பவம் குறித்த தகவல் அறிந்த மதுரை டவுன் மற்றும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இடுபாடுக்குள் சிக்கி இருந்த நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஜெயசிரியும் சண்முகராஜாவும் பலியானார்கள்.
கிருஷ்ணன், வைரமுத்து, செந்தில் இசக்கி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.