திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்துச் வருகின்றனர்

முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாகத் பெருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டுக்காண விசாகத்திருவிழா, கடந்த மே 13 ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் முருகன் தெய்வானையுடன் உற்சவர் சன்னதியில் இருந்து கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு வந்து அங்கு நீர் நிரப்ப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளுவார். நேற்று முருகன் தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தர்.

விசாகத்தையொட்டி இன்று அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது.

பின்னர் காலை 6 மணிக்கு கம்பத்தடி மண்டப்த்தில் உள்ள மண்டபத்தில் சண்முகர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினர். அங்கு காலை முதல் மாலை வரை, பக்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவையொட்டி, மதுரை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம்  எழுப்பினர். விழா ஏற்பாடுகளை கோயில் துணைஆணையர் சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.  

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் காவடி உள்ளிட்டவைகள் எடுத்து வருவார்கள், திருப்பரங்குன்றம் சன்னதி தெரு மற்றும் கோவில் வாசல் பகுதியில் முழுவதும் தேங்காய் நார் விரிப்புகள் போடப்பட்டுள்ளது. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை, சுவாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கு தனி வரிசை என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள்.

மேலும் அதிகாலை ஆறு மணி முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கோயில் சார்பில் கலவை சாதமும் வழங்கப்பட்டது.

கோயிலில் அதிகளவு பக்தர்கள் வர கூடும் என்பதால் காவல்துறையினர் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவசர ஊர்தி, தீயணைப்பு வீரர்கள் என ஏராளமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!