கொடைக்கானலில் விளையும் பழவகைகளில் பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் மிக முக்கியமானதாகும். கொடைக்கானலில் விளையும் பேரிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை உடையது. அதிக இரும்புச்சத்து உள்ளது. வயிற்றுக் கோளாறுக்கு சிறந்தது ஜீரண சக்தி மிகுந்தது. இந்த பேரிக்காய் வெளிமாநிலங்களில் குறிப்பாக கேரள மாநிலத்தில் அதிக அளவில் விற்பனையாகும். தற்போது இந்த பேரிக்காய் சீசன் கொடைக்கானலில் தொடங்கியுள்ளது. அட்டுவம்பட்டி, வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, பிரகாசபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பேரிக்காய் மகசூல் தற்போது தொடங்கியுள்ளது. பேரிக்காய் மகசூல் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் குறைவான அளவே மகசூல் செய்யப்பட்டு வருவதால் ஒரு கிலோ பேரிக்காய் 40 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த அளவு விலை விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகசூல் படிப்படியாக அதிகரித்து இன்னும் முப்பது முதல் நாற்பது நாட்கள் வரை தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். அதிக அளவில் மகசூல் கிடைக்கும் நிலையில் விலை குறையும் என்றும் விவசாயிகள் கூறினர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பேரிக்காய் மகசூல் குறைவாகவே உள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். பேரிக்காய் விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொடைக்கானலில் பேரிக்காய் பழக்கூழ் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனங்களை அமைக்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து
ள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.