திருப்பரங்குன்றத்தில் தை தெப்பத் திருவிழா 4ம் நாளில் க்ஷே வாகனத்தில் சுவாமி வீதிவுலா!

திருப்பரங்குன்றத்தில் தை தெப்பத் திருவிழா 4ம் நாளில் க்ஷே வாகனத்தில் சுவாமி வீதிவுலா!

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 10 நாட்கள் தெப்பத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா ஜனவரி 29ம் தேதி காலை 7 மணிக்கு தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழாவானது பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடக்கிறது.

தொடர்ந்து, தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், தங்கக் குதிரைவாகனம் என்று தினமும் ஒரு வாகனத்திலும் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிப்ரவரி 6ம் தேதி தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சி முடிந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய வைரத் தேரில் சுவாமி முருகனும் அம்பாள் தெய்வானையும் எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக பிப்ரவரி 7ம் தேதி காலை 10 மணிக்கு மிதவைச் சப்பரத்தில் சுவாமி அம்பாளும் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறும்.
அதைத்தொடர்ந்து இரவு சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன்பு சுவாமி மட்டும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் இல்லை நடைபெறும்.

திருவிழாவின் 4-ம் நாளான இன்று 01.02.2025 சினிக்கிழமை தெய்வானையுடன் முருகப்பெருமான் காலையில் தங்கச் சப்பரத்திலும், இரவில் க்ஷே வாகனத்திலும் முக்கிய வீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!