
தூய்மைப் பணியாளர்களை பாடாய் படுத்திய தனி அலுவலர்… நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.!
தூய்மைப் பணியாளர்களை பாடாய் படுத்திய தனி அலுவலர்… நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.!
பழனி அருகே துாய்மை பணியாளரை, தரையில் அமர வைத்து கூட்டம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில், துாய்மை பணியாளர்களுக்கு, பாதுகாப்பு உபகரணம் வழங்கப்பட வேண்டும். அப்படி, உபகரணம் வழங்கினாலும், முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதை, சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
மாறாக, எந்தவொரு உள்ளாட்சி அமைப்பிலும், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. துாய்மை பணியாளரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றிய ஊராட்சிக்குட்பட்ட கோதைமங்கலம் ஊராட்சியில், துாய்மை பணியாளர்களுக்கு உரிய உபகரணங்கள் மற்றும் கையுறை போன்ற பாதுகாப்பு வசதி இன்றி பணி செய்யுமாறு வற்புறுத்தி வருவதாகவும், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஒன்றில் தூய்மை பணியாளர்களை தரையில் அமர வைத்து கூட்டம் நடத்தியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில பணிகளுக்கு கையூட்டு பெருவதாகவும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு காரணமாக விளங்கிட வட்டார வளர்ச்சி அலுவலரும் தனி அலுவலருமான நளினா, ஊராட்சி செயலாளர் சாந்தி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் அன்னக்கொடி ஆகியோரது மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.