
ஒரே இடத்தில் 120 பாம்பு முட்டைகள்! பயத்தில் அலறிய மக்கள்.. வனத்துறை செய்த அந்த காரியம்..!
ஆந்திர பிரதேசம், மார்ச் 22: பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு எந்த தைரியான நபரும் கூட பாம்பை கண்டால் ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போவார்கள்.
ஒரு சிலர் பாம்பை கண்டாலே எங்கே யாரையும் கடித்து விட போகிறது என்ற பயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கொஞ்சம் தைரியத்தை வரவைத்து அடித்து கொன்று விடுவார்கள், இருப்பினும் வனத்துறையினர் பாம்பு குறித்து தெரிவிக்கையில் எல்லா பாம்புகளும் விஷம் கொண்டவை அல்ல என்று, பல்லுயிர் பெருக்கத்திற்கு பாம்புகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன என்று தெரிவிக்கிறார்கள். அந்தவகையில், யார் வீட்டிற்குள்ளே பாம்பு வந்துவிட்டால் அதை அடிக்காமல் வனத்துறையினருக்கோ, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கோ தகவல் கொடுக்குமாறு தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், ஆந்திர பிரதேசத்தை (Andra Pradesh) அடுத்த ஒரு ஊரில் உள்ள ஒரே இடத்தில் 120 பாம்பு முட்டைகள் (Snake Egg) கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
120 பாம்பு முட்டைகள்:ஆந்திர பிரதேசம் மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை அடுத்த மார்க்கபுரத்தில் ஒரே இடத்தில் 120 பாம்பு முட்டைகளை கண்டதும் உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உள்ளூர் மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, பாம்பு முட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள், வனத்துறை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் சேமித்து வைத்தனர். முட்டைகள் உயிர்வாழ்வதை உறுதி செய்வதற்காக மணல் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டன. அவற்றை பொரித்து குட்டிகளாக மாற்றினர். தொடர்ந்து, இவை தீங்கு விளைவிக்கும் பாம்புகள் அல்ல, மாறாக நீர்நிலைகளில் வாழும் விஷமற்ற பாம்புகள் என்று கண்டறிந்து, அருகிலுள்ள பல நீர்நிலைகளில் விட்டனர்.
80 குட்டிகள்:சில நாட்களுக்குப் பிறகு சுமார் 80 பாம்புக் குஞ்சுகள் குஞ்சு பொரித்தபோது அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவை குளத்துப் பாம்புகள் என்பதால், வனத்துறை அதிகாரிகள் சில பாம்புகளை கம்பம் குளத்திலும், மற்றவற்றை டோர்னாலா குளத்திலும் விட்டனர். இயற்கையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பாம்புகளைப் பாதுகாப்பதற்காக மக்கள் அதிகாரிகளைப் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.