மதுரையில் சாலை மறியல்!

92 வயது முதாட்டி உள்பட சாலை மறியலில் 20 பெண்கள் உள்பட 80 பேர் கலந்து கொண்டனர்
தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை. உடன்பாடு ஏற்பட்டது.*

மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குசவன் குண்டு கிராமத்தில் அமைந்திருக்கும் பில்லத்தி கருப்பசாமி கோயில் உள்ளது.

இந்த கோவிலுக்கு உரிய வாரிசுகளாக குசவன் குண்டு, குதிரை குத்தி, சோளங்குருணி, வலையங்குளம், திருமங்கலம் ,எஸ். ஆலங்குளம், வலையங் குளம் போன்ற பல்வேறு ஊர்களின் உள்ளனர் .

குசவன் குண்டு பகுதியை சேர்ந்த முத்தையா மற்றும் தம்பி வீரணன் ஆகியோர் இந்த கோயில் தங்களுக்கு சொந்தமானது என்றும் இதற்கு சொந்தமான இடங்கள் எங்களுக்கு சொந்தமானது என்றும் மற்றொரு வாரிசான ராஜம்மாள் பெயரில் போலியாக பத்திரம் பதிவு செய்துள்ளனர்.

இதனை அறிந்த கிராமத்து பொதுமக்கள் கோயில் நிலம் போலி பட்டா மூலம் ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் தாசில்தார் ,மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை .

இதனை கண்டித்து பொது மக்கள் சோளங்குருணி யிலிந்து வலையங்குளம் பைபாஸ் ரோட்டில் சாலை மறியல் செய்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பெருங்குடி போலீசார் எஸ் ஐ பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை செய்து மறியலை கைவிடச் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மதுரை தெற்கு தாசில்தார் சரவணன் கோயில் நிலம் குறித்து பட்டாவினை ஆய்வு செய்தார்.
பின்னர் கிராம மக்களிடம் பட்டா கிராமத்து பெயரில் தான் உள்ளது எனவும் இதனால் பொதுமக்கள் பயப்படத்தேவையில்லை என உறுதிபளித்தார்.

கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் பெயரில் பட்டா மாற்றியதால் சோளங்குருணி, வலையங்குளம், குசவன் குண்டு பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது. மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றி கோவில் நிலத்தை மீட்டுத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

பேட்டி

1, ஆறுமுகம்
வழக்கறிஞர்.

2.குமார்
கோளங்குருணி

3, ராஜம்மாள்
குசவன் குண்டு

.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!