அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு

டிஸ்பூர்: அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று புதன்கிழமை காலை 7.51 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சோனித்பூரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்._எனினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Leave a Reply

error: Content is protected !!