சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊனமுற்றோர் உட்பட ஐந்து பேருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்ச ருபாய் மோசடி செய்ததோடு, போலி பணி நியமன ஆணை வழங்கி தலைமறைவான போலி பத்திரிகையாளர் நாகர்கோவிலில் கைது. உடந்தையாக இருந்த அவரது மனைவி மற்றும் இரு மகள்கள் தலைமறைவு. போலீசார் தீவிர விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராபிட்சன். ஊனமுற்றவரான இவர் ஆட்டோ ஓட்டி வாழ்ந்து வந்தார். இவரை திருவட்டார் பகுதியை சேர்ந்த ஐசக் வயது 54 ராபின்சனை தொடர்பு கொண்டு, தான் தலைமை பத்திரிக்கை நிருபராக சென்னையில் வேலை பார்ப்பதாகவும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலரை தனக்கு தெரியும் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் கிளார்க், உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் நியமனம் செய்ய உள்ளதாகவும், வேலைக்கு கையூட்டு கொடுக்க வேண்டும். நான் நினைத்தால் வேலை வாங்கி தர முடியும் என ஒரு உதவியாளர் பணிக்கு மூன்று லட்சம் பேசி வாங்கி உள்ளார். இதனை நம்பி அதே பகுதியை சேர்ந்த லெனின், அகஸ்டின் உள்ளிட்ட ஐந்து பேர் 15 லட்ச ருபாய் வழங்கி உள்ளனர். பணத்தை பெற்று கொண்ட ஐசக் உயர்நீதிமன்றத்தில் வேலைக்கு நியமனம் செய்யப்பட்டதாக பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார். பின்னர் அது போலி என தெரிய வந்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிபாளரிடம் புகார் செய்தனர். விசாரணை செய்த குற்றப்பிரிவு போலிஸ் போலி பத்திரிகையாளர் ஐசக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஜெயராணி, மகள்கள் ஜாஸ்மின் சில்பா, ஜாஸ்மின் ஜெனிலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து,
ஐசக்யை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான ஐசக் மனைவி உள்ளிட்டோரை போலிஸ் தேடி வருகின்றனர்.