
மதுரை மாவட்டம்
சோழவந்தான் அருகே தேனூர் தச்சம்பத்து கட்டப்புலி நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தேனூர் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகளில் 7000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்த நிலையில் இந்த ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில்கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர் குறிப்பாக குடிநீர் மிக மோசமான நிலையில் வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர் இங்கு உள்ள குடிநீரில் பல இடங்களில் கழிவுநீர் கழிவு நீர் கலந்து வருவதாலும் குடிநீரில் வால் புழுக்கள் அதிகளவில் கலந்து வருவதாலும் சேரும் சகதியமாக குடிநீர் வருவதாலும் இதை குடிக்கும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் வயதானவர்கள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அடிக்கடி அரசு மருத்துவமனைக்குசெல்லும் நிலை ஏற்படுவதாக அச்சம் தெரிவிக்கின்றனர் கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் தற்போது வரைசுத்தம் செய்யாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கின்றனர் இந்த நீரையே சமையலுக்கும் பயன்படுத்துவதால் சமையலுக்கு பயன்படுத்தும் போது மஞ்சள் நிறத்தில் சாப்பாடு வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தேனூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட பலரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் ஆகையால் இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.